Tuesday, February 09, 2016

பசிக்கொடுமை!
--------------------------------
முந்தானைத் தொட்டில் முதுகிலே தொங்கிநிற்க
செங்கனித் தேன்மழலை எட்டித்தான் பார்த்திருக்கச்
செங்கற்கள் தம்மைத் தலையில் சுமந்தேதான்
அன்பான தாயோ  வயிற்றின் பசியடக்க
தன்னாலே ஆனமட்டும் நாளும் உழைக்கின்றாள்!
புண்படுத்தும் ஏழ்மையைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home