Thursday, February 04, 2016

குறுந்தொகைப் பாடல் 2
------------------------------------------------
கொங்குதேர் வாழ்க்கை
----------------------------------------------------
தும்பியே! நாள்தோறும் பூவினத்தைச் சுற்றுகின்றாய்!
வண்ணமலர் ஏந்தும் நறுமணங்கள் நீயறிவாய்!
என்மீது நட்பைப் பொழிந்தும் மயில்சாயல்
கொண்டு நெருங்கிய பற்களைக் கொண்டவளும்
என்னுடைய அன்பரசிக் கூந்தல் நறுமணத்தை
விஞ்சும்  மலர்களுண்டோ சொல்.

0 Comments:

Post a Comment

<< Home