Tuesday, January 26, 2016

மொழிப்போர்

மொழிப்போர் தியாகிகள்
           நாள் 25.01.2016
------------------------------------------------
செந்தமிழைக் காப்பதற்குத் தங்களது இன்னுயிரைத்
தந்த, தியாகத் தமிழரின்தாள்தொட்டே
என்றும் நினைத்தே வணங்குவோம்! அந்தநாள்கள்
நெஞ்சில் விதைத்த உணர்வு.

எண்ணற்ற போராட்டம் எண்ணற்ற இன்னல்கள்
அன்றிருந்து இன்றுவரை தொட்டுத் தொடர்கிறதே!
வண்டமிழைக் காக்கும் கரங்களாக மாறுவோம்!
அம்மா! புறச்சதியும் உட்சதியும் என்னசெய்யும்?
நம்மொழிக்கு நாம்தானே காப்பு.

0 Comments:

Post a Comment

<< Home