Wednesday, January 20, 2016

பொறுக்கமாட்டார்!
-----------------------------------------------------------
ஒன்றாய் இருந்தால் வலிமைதான்! இவ்வுலகம்
ஒன்றை இரண்டாக்கி மூன்றுபேர் சேர்ந்துவந்து
அம்மம்மா நான்காக்கி ஐந்துபேரைத் தூண்டிவிட்டு
கண்டபடி வேடிக்கை ஆறுபேர் பார்த்திருக்க
துண்டைப் பெரிதாக்க ஏழுபேர் வந்திடுவார்!
கண்முன்னே எட்டாய்ச் சிதறவைத்தே தேங்காய்ச்சில்
ஒன்பதாக துள்ளி விழுவதைப்போல் ஆக்கிவிட்டே
நன்றாக பத்துபேர்முன் கேலிப் பொருளாக்கிச்
சென்றிடுவார் இங்கே நகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home