Friday, January 15, 2016

பொங்கலோ பொங்கல்!
------------------------------------------------
பொங்கலிடும் பானையில் கொத்துமஞ்சள் கட்டிவைத்துச்
செங்கரும்பு நிற்கவைத்தே உற்றார் உறவினர்கள்
இங்கே மகிழ்ச்சியுடன் சூழ்ந்திருக்க
பொங்கலங்கே பொங்குகின்ற நேரத்தில் செந்தமிழால்
பொங்கலோ பொங்கலென்றே கூவித்
திளைத்திடுவோம்!
ஒன்றாக வாழ்த்திடுவோம் நாம்.

சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல் சாம்பாரும்
நன்கு மணங்கமழ வாழை இலைபோட்டே
பண்பு மிளிரப் பகிர்ந்துண்ணும் கோலங்கள்
கண்கொள்ளாக் காட்சிதான் காண்.

உழவில்லை என்றால் உலகில்லைஎன்றும்!
உழவர்கள் தந்த உழைப்பிற்கு நன்றி
வழங்குகின்ற பொன்னாளே இந்தத் திருநாள்!
உழவருக்கு நன்றி நவில்

0 Comments:

Post a Comment

<< Home