Friday, January 15, 2016

இரண்டும் உண்டு!
------------------------------------+
நான்வந்த பாதையிலே பூக்கள் கிடந்தபோது
மான்போலத் துள்ளி மகிழ்ந்து நடந்துவந்தேன்!
தேன்மலரைத் தாண்டியதும் முள்ளினங்கள் கண்சிமிட்ட
நானோ முகஞ்சுழித்துத் தான்நடந்தேன்! அம்மம்மா!
தாங்கினேன் பூக்களைப் பார்த்து.

0 Comments:

Post a Comment

<< Home