Tuesday, January 29, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

அப்பா அப்பா இங்கேவா
அய்ந்தாம் குறளைச் சொல்லித்தா

வள்ளுவர் என்ன சொல்றாரு
வந்தே நீயும் சொல்லித்தா

வந்தேன் மகனே உன்னிடத்தில்
குறளின் பொருளைச் சொல்கின்றேன்

இறைவனின் உண்மைப் பொருளுணர்ந்து
ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து

புகழை நாட்ட விரும்புவோர்கள்
நன்மை தீமை இரண்டையும்

சமநிலை கொண்டே பார்ப்பார்கள்!
சலனம் இன்றி வாழ்வார்கள்!

இந்தப் பொருளை நீயுணர்ந்து
உன்னைச் செம்மைப் படுத்திக்கொள்!

0 Comments:

Post a Comment

<< Home