Wednesday, January 22, 2020

சிங்கத்தின் ஆணவம்!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

தவறாமல்  நாளும் விலங்கிலே ஒன்று
இரையாக வந்து பலியாக வேண்டும்!
அகந்தையுடன் சிங்கம் முழங்கிய தங்கே!
முகம்வாடி நித்தம் விலங்கொன்று வந்தே
பலியாகி நின்ற அவலத்தைக் கண்டே
விலங்குகள்  கூடிப் பேசின அங்கே!
சிறுமுயல் நாளை பலியாக வேண்டும்!
சரிசரி பாருங்கள் எந்தன் அறிவை!
சிரித்தே உரைத்துக் குகையை நோக்கி
மெதுவாய் நடந்தது தாமதம் செய்தே!
குகையின் வாசலில் சிங்கந்தான் நிற்க
குறுமுயலைக் கண்டதும் கோபமாய்ச் சிங்கம்
முயலைப் பிடித்ததும், "வேறொரு சிங்கம்
வரவே பயந்தேநான் ஓடித்தான் வந்தேன்".
உரைத்ததும் காட்டிலே இன்னொரு சிங்கம்?
 முழங்கியே காட்டென்று சிங்கமோ சொல்ல
முயலும் கிணற்றிலே பாரென்று சொல்ல
பயத்துடன் சிங்கமோ எட்டித்தான் பார்க்க
நிழலையே உண்மையென்று நம்பிய சிங்கம்
விழுந்தே இறந்தது பாழுங் கிணற்றுள்!
விலங்குகள் கூட்டம் முயலுக்கு வாழ்த்தை
உளமாறச் சொல்லியே நிம்மதி யாக
உளைச்சலே இன்றி உலவின அங்கே!
.
மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home