Sunday, October 25, 2020

இடைவெளி நூல் வெளியீடு

 சான்றோர்த் தளம் மின்நூல்வெளியீடு


ZOOM இணையதளம்


நூல் இடைவெளி: நாள் 24.10.20


நூலாசிரியர்: 

கவிஞர் ஞால ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து!


இடைவெளி நூலை ரவிச்சந்ரன் தந்தார்!

தழைக்கும் தமிழில் கவிக்கோ அவர்கள்

அளித்தார் அணிந்துரை வாழ்த்தினார் வந்து!

எழுச்சிக் கவிஞரை வாழ்த்து.


நூல்நயம் பாநயம் எல்லாம் மிளிர்கின்ற

நூலைக் குறித்தே அருமையாய்ப் பேசினர்!

ஞால ரவிச்சந் திரனாரை வாழ்த்துவோம்!

நூல்பல தந்துவாழ்க நீடு.


அட்டைப் படத்தில் மகளின் கலையாற்றல்

முத்திரை ஏந்தும் கலைநயம் காண்கிறோம்!

பத்துபேர் சான்றோர்கள் பங்கெடுத்து வாழ்த்தினர்! 

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home