Monday, March 15, 2021

திண்டுக்கல் பயண நினைவுகள்! 15.03.21

 திண்டுக்கல் பயண நினைவுகள்!

15.03.21

மகள் பிருந்தா  தந்த இட்லி அருமை!

போகும் வழியில் மரநிழலில் கார்நிறுத்தி

காலை உணவருந்த காருக்குள் உட்கார்ந்தே

ஆர்வமுடன் டப்பாவை நாங்கள் திறந்துபார்த்தோம்!

பார்த்ததும் மெய்மறந்தோம் அங்கு.


மல்லிகை வண்ணத்தில் பூப்போன்ற இட்லிகள்மேல்

எண்ணெய் தடவி மிளகாய்ப்  பொடிசேர்த்தே 

அன்பு மகளாம் பிருந்தா கொடுத்திருந்தார்!

நன்கு ரசித்தே உள்ளம் மகிழ்ந்திட

உண்டோம் பசியாற்றி தான்.





0 Comments:

Post a Comment

<< Home