Monday, April 19, 2021

நமது மண்வாசம் இதழுக்கு வாழ்த்து!

 வணக்கம். நமது மண்வாசம் இதழுக்குத் தாங்கள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. பேராசிரியர் மோகன் - பேராசிரியர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் அறக்கட்டளை சார்பில் நமது மண்வாசம் இதழுக்குச் சிறந்த இலக்கியச் சீரிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். தங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று.


நமது மண்வாசம் இதழுக்கு வாழ்த்து!


நண்பர் திருமலை உழைப்பிற்கு வாழ்த்து.


இலக்கியச் சீரிதழ்  என்ற விருதை

வழங்கிப் பெருமை படுத்திய நல்லோர்

இலக்கியச் சோலைத் தென்றல் இணையர் 

பெருந்தன்மைப் பண்பாளர் நிர்மலா 

மோகன்

அறநெறி போற்றுகின்ற கட்டளை வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home