Wednesday, October 27, 2021

இல்லம் தேடி கல்வி திட்டம்!

 Thank


இல்லம் தேடி கல்வி திட்டம்!

27.10.21

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிப் படிப்போ
உருக்குலைந்து போனதால் மாணவச் செல்வம்
படிப்பிலே தொய்வு இடைநிற்றல் சூழல்
எதிர்கொண்டார் ஏக்கமுடன் தான்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார் வள்ளுவர்!
கற்கின்ற சூழலை வீடுதேடி ஏற்படுத்த
அக்கறையாய்க் கொண்டுவந்தார் வாழ்த்து.

இல்லத்தைத் தேடிவரும் கல்வியெனும் திட்டத்தை
நல்மனங் கொண்டே நடத்துகின்றார் நம்முதல்வர்!
கல்வியைக் கற்று முழுமை பெறுவதற்கே
நல்வாய்ப்பைத் தந்தார் மகிழ்ந்து.

கற்கின்ற ஆண்டில் இடைநிற்றல் இல்லாமல்
கற்பதற்கு வாய்ப்பை உருவாக்கி பிள்ளைகள்
கற்பதை இவ்வரசு அக்கறை கொண்டுதரும்
அற்புதத் திட்டம் இது.

அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணி
இணையற்ற திட்டத்தைத் தந்தார்கள் வாழ்க!
முனைப்பும் முயற்சியும்  கொண்ட முதல்வர்
பணிகளை வாழ்த்துவோம் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home