Friday, November 26, 2021

மழையே துயர்


மழையே துயர்!

மழையே!அளவாகப் பெய்தால் அழகே!

மழைநீ அளவின்றிப் பெய்தால் அழிவே!

மழையே! தொடர்மழையாய் மாறிய கோலம்

நிலையானால் வாழ்வே துயர்.


காற்றழுத்த மண்டலங்கள் நாளும் உருவாகி

ஆற்றலுடன் ஆழிக் கரையோர ஊர்களைத்

தாக்கும் நிலையெடுத்தால் தத்தளிப்பே வாழ்வாகும்!

சீற்றம் குறைந்தால் நலம்.



மதுரை பாபாராஜ்

27.11.21

 

0 Comments:

Post a Comment

<< Home