Monday, December 27, 2021

குறள் 90 விருந்தோம்பல்


குறள் 90:


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


இன்றைய விருந்தோம்பல்!


உறவினர் வீட்டுக்குச் சென்றேன்! அறையில்

மகனங்கே  மெய்நிகர் ஆட்டத்தில் வாழ்ந்தான்!

மகளங்கே கைபேசி பேச்சிலே வாழ்ந்தாள்!

இணையரோ தங்கள் மடிக்கணினி பார்த்துப்

பணிசெய்து கொண்டிருந்தார்! வீட்டுக்குள் சூழல்

தனித்தனியாய் எல்லோரும் ! பார்த்தனர் என்னை!

மணித்துளி புன்னகை செய்துவிட்டு மீண்டும்

அவரவர் வேலை பரபரப்பில் மூழ்க

வெளியிலே வந்தேன் நகர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home