Friday, November 11, 2022

இல்லறத்தில் துறவறம்

 இல்லறத்தில் துறவறம்!


இல்லறத்தில் வள்ளுவர் கூறும் துறவறம்

பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்வதல்ல! பேராசை

உள்ளப் பொறாமை, மாக்களாக்கும் கோபதாபம்,

சொல்லிலே இன்னாச்சொல் 

எல்லாம் துறந்தே  இணக்கமாக

வாழ்வதற்கே

நல்லறம்  கூறுகின்றார் காண்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home