Friday, March 03, 2023

கவிஞர் இமயவரம்பன்


02.03.23

கவிஞர் இமயவரம்பன் இன்று எந்தன் இல்லத்திற்கு வருகைதந்த மகிழ்வான தருணம். பெரியார் இன்றும் என்றும் என்ற நூலைப் பரிசளித்தார்

மதுரை பாபா அவர்களுக்கு வாழ்த்து!

பன்முகத் தன்மையை
         தன்னுள் கொண்டு
கண்ணில் காண்பதை
         காதால் கேட்பதை
கவியாய் வடித்து
         கருத்துடன் அளிக்கும்
ஆற்றலை மிகையாய்
         அகத்தில் கொண்ட
அகவை எழுபதில்
         அன்பைப் பொழியும்
அருமைக் கவிஞர்
         அய்யா பாபா!
நொடிக்கொரு கவிதை
         துடிப்புடன் யாத்து
அடிக்கடி கொடுத்து
         அடைவார் இன்பம்!
மதுர கவிராயர்
         மாண்புறு பாபா!

கோ.இமயவரம்பன்
 

0 Comments:

Post a Comment

<< Home