Thursday, May 25, 2023

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படம்


நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலைகளின் பின்னணி! அங்கேயோ பச்சை

இலையொன்று காற்றில் தவழும் அழகு!

மலைதொடும் வானில் பறவைகளின் கூட்டம்!

சலசலக்கும் நீரோடும் ஆறு! கரையில்

அழகாக நிற்கும் மரங்களுடன், புல்லால்

பரவிய புல்வெளி! அங்கே பறந்து

களிக்கின்ற வண்ணத்துப் பூச்சியின் காட்சி! அரங்கேற காலை வணக்கத்தை நண்பர்

வழங்கினார் நன்றியுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home