கவிப்பேரரசு வைரமுத்து
ஞானபீட விருதுபெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்து!
வடுகபட்டி ஊரில் இருந்துவந்து நாளும்
கடுமையாய்ப் பேருழைப்பால் இன்று கலையில்
சுறுசுறுப்பாய் அல்லும் பகலும் புகழில்
படிப்படியாய் சாதித்தாய் நீ.
மடுவாக வந்தே மலையாய் உயர்ந்து
புதுமைகள் செய்தே புகழ்க்கொடி நாட்டி
நறுந்தமிழ்த் தாயின் தவப்புதல்வ னானாய்!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home