அறன்வலியுறுத்தல்
அறன்வலியுறுத்தல்! 4
-----------------------------------------------
அறவழி சிறந்த வழி
பெருமைக்கு உகந்த வழி
------------------------------------------------------
செல்வம் புகழும் சேர்ப்பதற்கு
அறவழி தானே சிறந்தது!
அறங்கள் செய்வது நன்மைதான்!
மறப்பது என்றும் தீமைதான்!
இயன்ற வரையில் அறச்செயல்கள்
செல்லும் இடமெல்லாம் செய்வோமே!
மனதில் கள்ஙகம் சுமந்தேதான்
செய்யும் அறச்செயல் பகட்டேதான்!
பொறாமை ஆசை கோபங்கள்
மனதைப் பிழியும் கடுஞ்சொற்கள்
இவைகளைத் தவிர்ப்பதே அறமாகும்!
தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாகும்!
இளமையில் வேண்டாம் முதுமையிலே
அறங்களைச் செய்வோம் என்றேதான்
ஒத்திப் போட வேண்டாமே!
இன்றே செய்தல் விவேகந்தான்!
அறத்தைச் செய்வோர் உயர்ந்தவராம்!
செய்யா தவரே தாழ்ந்தவராம்!
அறத்தைத் தொடர்ந்து செய்திடுவோம்!
இந்தப் பிறவியை வென்றிடுவோம்!
அறவழிச் செயலில் புகழ்மணக்கும்!
பிறவழிச் செயலில் பழிமணக்கும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home