Tuesday, November 18, 2014

ஆட்டுவிக்கும் காலம்
------------------------
இப்படித்தான் வாழவேண்டும்என்றே கணக்கிடுவோம்!
 இப்படித்தான் வாழ்வதற்குக் காலம் வழிகாட்டும்!
அப்படித்தான் நம்மால் வாழ முடியுமிங்கே!
இத்தரணி வாழ்க்கை இது.
சரக்கடிக்காதே கெட்டுப் போகாதே
நடுத்தெருவில் குடும்பத்தை நிக்கவைக்காதே

அம்மா மொகத்தை பாரு
அப்பா மொகத்தை பாரு
சம்சாரம் முகத்தை பாரு
பிள்ளைங்க முகத்தை பாரு

ஏக்கப் பெருமூச்சு
சோகச் சித்திர மாச்சு(சரக்கடிக்காதே)

ஒட்டிப் போன வயித்த்ப் பாரு
ஒலர்ந்து போன கன்னம் பாரு
குடியால வந்த வினை நெனச்சுப்பாரு
உடனடியா திருந்தப்பாரு
(சரக்கடிக்காதே)

0 Comments:

Post a Comment

<< Home