Sunday, January 04, 2015

மனக்கடலில் மண அலைகள்
-------------------------------------------------------
கைத்தலம் பற்றிக் கணவன் மனைவியாய்
முத்திரை ஏற்றே குழந்தைகள் பெற்றெடுத்துக்
கற்றறிந்த  மானிடராய் மாற்றி சமுதாயச்
சுற்றில் நிலைபெறச் செய்தே முதுமையில்
தத்தளித்து மீண்டும் மனைவியின் கைத்தலம்
பற்றித்தான் நான்நடக்க என்கையை இல்லாளும்
பற்றி நடக்கின்றாள்! இளமைப் பருவத்தில்
அக்கறையாய் ஏற்ற திருமணக் கோலத்தில்
பற்றுடன் ஒன்றியது நெஞ்சு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home