Wednesday, March 30, 2016

மேகமே பதில் சொல்!
------------------------------------------
மேகங்களே!
கடலில்
தெக்கு தெக்கு என்று
தண்ணீர் இருக்கிறது!
உங்களை யார்
முகந்துகொள்ள
வேண்டாமென்று
சொன்னது?
கருமேகமாக
மாறி
மழைபொழிய
வேண்டாமென்று
யார்
சொன்னது?
நல்லார் ஒருவர் உளரேல்
அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை
என்று ஔவையார்
சொல்லி இருக்கின்றார்!
அவரது வாக்கு பொய்க்கலாமா?
இங்கே ஒருவர்கூடவா
நல்லவரில்லை?

மேகமே! உன் பதிலென்ன?

மேகத்தின் மறுமொழி

நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான்
இவ்வுலகம் பாவலரே! மூலவித்து
செங்கதிரோன்
சொல்வதைக் கேட்போமா நாம்?

நல்லவரோ கெட்டவரோ வெப்ப மயமாக்கி
தொல்லுலகைப் பாழ்படுத்தி நிற்கின்றார் நாள்தோறும்!
எல்லையற்ற தண்ணீரை ஆவியாக்கும்
நற்பணிக்கோ
தொல்லை இதுதான் உணர்.

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுமளவு
நாசத்தை சந்தித்தும் என்கடமை செய்தாலும்
நாடறிய நல்லவர்கள் வாழ்ந்தாலும்
மேகத்தைக்
கூடுகட்ட என்முயற்சி தோற்கிறதே!
என்செய்வேன்?
பாடுபட்டு பார்க்கின்றேன் நான்.

0 Comments:

Post a Comment

<< Home