Sunday, May 29, 2016

பாபாராஜ்;

வள்ளுவர் குடும்பத்தின்
வற்றாத தமிழ் நதி.
மரபும் புதுமையும்
இசைந்திசைக்கும்
கூடல் குயில்.

இருந்தாலும்
வெண்பா
பாபாவின்
தலைவாழை
இலையில்
"நிச்சய தாம்பூலம்

வள்ளுவர் குடும்பத்தின்
தணிக்கை குழு அதிகாரி.
பாலா கவிதைக்கும்
ஹெலினா படத்திற்கும்
பாபாவின்
கத்திரிக்கோல் பற்றிய
கவனம்  உண்டு.

கொடைக்கானல் ஆனாலும்
சிம்லா ஆனாலும்
இணைந்து வருவது
இல்லத்தரசி மட்டுமல்ல.
இன்பத் தமிழும் தான்.

சிம்லாவில்
குதிரையின்
குதிபோடும்
குளம்புகளுக்கு
முன்னால்
குதித்து ஓடியது
பாபாவின் வெண்பா

வெள்ளைப் பளிங்குக்
காதல் சின்னத்தின்
முன்னின்று
வெண்பா வேந்தரும்
வீட்டரசியும்.

உள்ளமெல்லாம்
"ஊற்றெடுக்கும்
ஒற்று'மை'யில்"
தொட்டு எழுதிய
கவிதை.

வசந்தா அம்மையார்
வசப்பட்டதால் தான்
இந்த
ஆலவாய்க் குயில்பாட்டு
ஆதம்பாக்கத்தில்
நித்தம் ஒலிக்கிறது.

வாழ்க வளமுடன்

வள்ளுவர் குடும்பத்தின்
சார்பில்

அன்புடன்
ஆர்.பாலகிருஷ்ணன்



0 Comments:

Post a Comment

<< Home