Saturday, December 24, 2016


வார்தா புயல்

வர்க்கபேத மின்றி புயலிங்கே சீரழித்துத்
துள்ளித் துடிக்கவைத்த கோலத்தைப் பார்த்தே
எள்ளிநகை யாடியது! சென்னையைப் பந்தாடிச்
சொல்லி அடித்தது பார்.

மின்கம்பம் விண்நோக்கி நின்ற மரங்களும்
அங்கங்கே கட்டிடங்கள் கூரைகள் எல்லாமே
தொங்கிச் சரிந்திருக்க வேரோடு வீழ்ந்திருக்க
இன்னும் இருட்டிலே வாழ்வு.

காற்றடித்த வேகத்தில் காகிதமாய் ஆனதுபார்!
போட்டுப் புரட்டித் தலைகீழாய் மாற்றியது!
ஆட்டத்தைக் கட்டவிழ்த்துத் தாண்டவ மாடியது!
காற்றின் முகாரியோ இஃது.

0 Comments:

Post a Comment

<< Home