Tuesday, December 06, 2016

திருவிளையாடல்

தருமி

சங்கரன் ஓலையில் சங்கத் தமிழ்க்கவிதை
தந்தான்! தருமியும் வேந்தனிடம் வாசித்தான்!
என்னதான் மன்னனும் பாராட்டி வாழ்த்தினாலும்
பொங்கினான் நக்கீரன் பாட்டிலே குற்றமென்று!
சங்கரனும் வந்தான் சினங்கொண்டே! வாதித்தான்!
சங்கரனே ஆனாலும் குற்றமென்றான்! நக்கீரன்!
சங்கரன் நெற்றிக்கண் சுட்டதும் நக்கீரன்
வெந்தேதான் பொற்றா மரைக்குளத்துள் மூழ்கினான்!
சங்கரன் நக்கீரா! வாஎழுந்தே! என்றதும்
வந்தான்பார் நக்கீரன் தான்.

0 Comments:

Post a Comment

<< Home