Wednesday, November 23, 2016


Vov

வள்ளுவர் குரலை எதிரொலிக்கும்-- அதில்
வள்ளுவம் காட்டும் பொருளிருக்கும்!

நாட்டுக்கு நாடு உறுப்பினர்தான்
வீட்டுக்கு வீடு உறுப்பினர்தான்

இலக்கியம் கவிதை தத்துவங்கள்
எல்லாப் பதிவும் உண்டிங்கே
படங்கள் போட்டு கவிதைகள்
புகட்டும் முறயும் இங்குண்டு!

படங்கள் போட்டுத் திருக்குறளை
பொருத்திக் காட்டும் முறையுண்டு!

உளவியல் திருமூலர் இதிகாசம்
எல்லாச் சிறகும் விரியுமிங்கே!

போட்டி பொறாமை இருக்காது
வள்ளுவ ஒற்றுமை வீடிதுதான்
வந்து சேர்ந்தால் இதுபுரியும்
வந்தால் நன்மை உங்களுக்கே!

சூரியன் இங்கே மறையாது
விடிய விடிய வள்ளுவந்தான்

0 Comments:

Post a Comment

<< Home