Tuesday, January 31, 2017

கானல்!

இன்பமே வாழ்க்கை என்றே
 இறுமாந் திருந்த போதோ
இன்னலின் கீற்று வந்தே
 இடித்தது உள்ளந் தன்னில்!

உண்மைதான் என்று நம்பி
 ஊர்வலம் போன போது
உண்மையே பொய்யாய் மாறி
 உறுத்திடச் செய்யக் கண்டேன்!

அக்கரைப் பச்சை என்றே
 அருகினில் சென்று பார்த்தேன்!
இக்கரையே மேல்தான் என்றே
 இதயமோ நகைக்கக் கண்டேன்!

0 Comments:

Post a Comment

<< Home