Tuesday, January 31, 2017

இறுதிக் கவிதை

இறுதிக் கவிதை!

பத்துக் குறள்கள் போதும்!

இறப்பேன்! இறந்தால் சடங்குகள் வேண்டாம்!
முறைகளும் வேண்டாம்! முடியிறக்க வேண்டாம்!
குறள்களில் பத்தை உரைத்தேதான் வாழ்த்து!
கடமைக்குச் செல்க விரைந்து.

மனைவி வசந்தாவின் மங்கலத்தை மாற்றவேண்டாம்!
நினைத்தாலே போதும்  அமாவாசை வேண்டாம்!
தனிமனித நல்லொழுக்கம் போற்றினால் போதும்!
மனதிலே மாசின்றி வாழ்.

குறைவின்றி என்னைக் குழந்தைகள் பார்த்தார்!
நிறைவுடன் பேரன்கள் பேத்தியும் சூழ
உறவுகள்  போற்ற உலகினில் வாழ்ந்தேன்!
கடந்தது வாழ்க்கை மறைந்து.

கவிதைப் பறவைச் சிறகை  விரிக்கக்
கவிஞன் பறந்தான் இனிமேல் கவிதைப்
பொழிவதோ இல்லை! எழுதிய பாக்கள்
வழிகளைக் காட்டினால் நன்று.

0 Comments:

Post a Comment

<< Home