Tuesday, July 11, 2017


இதயமே துடிக்காதே!

உளைச்சலே உள்ளத்தில் நாளும் செழிக்கும்
விளைச்சலாய் மாறினால் உள்ளக் குமுறல்
களைகளால் மண்டி துடிப்பை நிறுத்த
அலைபாயும் கண்ணே! உணர்.

சிறுகதையாய்க் குத்திக் கிழித்தபோது நானோ
பொறுமையாய் வேடிக்கை பார்த்தே துடித்தேன்!
சிறுகதை இன்று தொடர்கதையாய் மாறி
நொறுக்கினால் என்னசெய்ய நான்?

0 Comments:

Post a Comment

<< Home