Tuesday, July 11, 2017


உயிரே புறக்கணித்தால்!

என்னைப் புறக்கணித்தால்  உள்ளம் வலிக்கிறது!
புண்பட்டுப் புண்பட்டே ஏக்கம் கசிகிறது!
என்ன தவறிழைத்தேன்? ஒன்றும் புரியவில்லை!
இன்னுமா வாழவேண்டும் நான்?

ஒவ்வொரு நாளும் உள்ளம் ரணப்பட
கவ்விப் பிழிந்தெடுக்கும் இங்கே நிகழ்வென்றால்
துள்ளித் தவிக்காதோ நெஞ்சம் துவளாதோ?
வெள்ளத்தில் மூழ்கும் உணர்வு.

எனக்குமட்டும் சோதனையும் வேதனையும் என்றால்
மனதிற்குள் ஆயிரம் தேள்கள் கொட்டும்!
அனல்பாதை மீது நடைப்பயணம் அம்மா!
மனக்கணக்கில் நாளும் தவறு.

0 Comments:

Post a Comment

<< Home