Saturday, January 19, 2019

 தைப்பொங்கல்-- 15.01.2019

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

தையே வருக!தமிழ்ப்புத்தாண்டே வருக!

தமிழ்ப்புத் தாண்டின் தொடக்கமே தைத்திங்க ளாகும்!
கணித்தது  பொய்யில்லை!கல்வெட்டுச் சான்றால்
தமிழினம் கொண்ட தனித்தன்மை கண்டோம்!
தமிழ்ப்புத் தாண்டை வரவேற்று வாழ்த்து!
தமிழ்மணக்க கூடிநின்று வாழ்த்து.

உழவர் திருநாள்

கைகூப்பி வாழ்த்துவோம்!

உயிரூட்டி நாளும் நடமாட வைக்கும்
செயலி உழவரைக் கைகூப்பி வாழ்த்து!
உயர்த்தி மகிழ்வோம் உழைப்பை மதித்து!
உளமார நன்றியைக் கூறு.
--------------------------------------------------------------
16.01.19

திருக்குறள் பொதுமுறை!

வள்ளுவர்நாள் வாழ்த்து!

வாழ்வியல் நற்கருத்தை உள்ளடக்கி வள்ளுவர்
பாவினத்தில் ஏழேழு சொற்களில் அற்புதமாய்
ஆயிரத்து முந்நூற்று முப்பது தேன்குறளால்
வேலிகளைத் தாண்டாமல் வாழவழி காட்டுகின்றார்!
வேலிக்குள் வீறுநடை போடு.

எங்கெங்கு வாழ்ந்தாலும் மக்களின் வாழ்வியல்
பண்பும், தனிமனித நல்லொழுக்கப் பண்புகளும்
இங்கே பொதுவாகும்! செந்தமிழே வள்ளுவத்தை
என்றும் பொதுமுறையாய்ப் போற்று.

0 Comments:

Post a Comment

<< Home