Tuesday, January 29, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

இந்தக் குறளுக்குப் பொருளென்ன
மாமா நீங்கள் சொல்லுங்க

செல்லக் கண்ணே வந்துட்டேன்
தெரிந்த பொருளைச் சொல்கின்றேன்

இணையே இல்லா நற்பண்பை
தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும்

சான்றோர் நமக்கு வழிகாட்டி!
நடப்போம் அவரைப் பின்பற்றி!

அவரது நெறியில் நாம்வாழ்ந்தால்
கவலை இன்றி வாழ்ந்திடலாம்!

அவரைத் தவிர்த்து வாழ்பவர்க்கு
கவலை தீர வழியில்லை!

நாமும் சான்றோர் வழிநடப்போம்
மனதின் கவலையை மாற்றிடுவோம்

0 Comments:

Post a Comment

<< Home