Wednesday, March 27, 2019


திருக்குறள் பாடல்


வாழ்வியல் நெறிமுறை திருக்குற ளாகும்!
உலகமே போற்றும் பொதுமுறை யாகும்!
தமிழின் மகுடம் திருக்குற ளாகும்!


அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

திருக்குறள் பாடல்!

மக்களுக் கானது  திருக்குற ளாகும்
மனதின் மாசை நீக்குவ தாகும்
எப்போதும் துணையாய் வருவது குறளாம்.

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தாய்மொழித் தமிழில் பேசிடும் குறளாம்
உயிர்களுக் கெல்லாம் உறுதுணை யாகும்
விளக்கொளி போல ஒளிதரும் குறளே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

ஒழுக்கத்தின் வடிவே திருக்குறள் தானே
தீமையை அகற்றிடும் திருக்குற ளாகும்
பண்பட வைப்பது திருக்குறள் தானே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தமிழக மண்ணில் தோன்றிய குறள்தான்
வாழ்வியல் அற்புதம் அருமைக் குறள்தான்
ஈரடி எழுசீர் திருக்குறள் தானே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தமிழ்த்தாய் மடியில் தவழ்ந்திடும் குறளே
உலகப் பொதுமுறை திருக்குறள் தானே
வாழ்க்கையின் உறவே திருக்குற ளாகும.

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)
 

0 Comments:

Post a Comment

<< Home