Friday, April 19, 2019


புனித வெள்ளி!

19.04.2019

கொடுங்கோலர் ஆட்சியில் மாசற்ற ஏசு
கொடுமையின் உச்சகட்ட தண்டனையை ஏற்றார்!
துடிக்கவைக்கும் முள்மகுடந் தன்னைத் தலையில்
அடக்க,  கருணையின் நாயகன் அங்கே
நடந்தார் சிலுவையைத் தோளில் சுமந்தே!
அடலேறாம்  ஏசுவைக் கல்வாரிக் குன்றில்
அகம்துடிக்க அந்தச் சிலுவையில் ஏற்றி
குகைக்குள்ளே தள்ளித்தான் வாசலை மூடி
பகைவர் களித்திருந்தார் பார்.


0 Comments:

Post a Comment

<< Home