Saturday, April 13, 2019

கொலுசு!

வெள்ளிக் கொலுசுகள் சந்தக் கவிபாட
துள்ளி நடந்துவந்தாள் அலைபோல மாது!
கள்ளச் சிரிப்பால் கவியழகைச் சிந்தி
அள்ளி வழங்கினாள்! ஆர்வமுடன் சென்றேன்!
தள்ளித்தான் சென்றாள்!தளிர்க்கரத்தால்
முகத்தை
மெள்ளத்தான் மூடினாள்! ஊடினாள் ஓடி!
முள்ளைத் தைத்தாள் சிரித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home