Thursday, April 04, 2019

மானுட நூல்!

வள்ளுவத்தை இங்கே பொதுமறையாய் ஏற்றவர்கள்
கிள்ளுகின்றார் சைவமென்றும் வைணவம் என்றுமிங்கே!
துள்ளுகின்றார் மற்றவரும் தங்கள் மதமென்றே!
வள்ளுவத்தை வள்ளுவமாய்ப் பார்த்தால் பிணக்கில்லை!
வள்ளுவம் மானுட நூல்.

பொதுமுறை என்றால் இணக்கத்தைத் தூண்டும்!
பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக மாறும்!
இதுவொன்றே நேர்மறைப் போக்கென்று சொல்வோம்!
மதங்களைத் தாண்டி நிமிர்.

0 Comments:

Post a Comment

<< Home