Sunday, September 08, 2019

சந்ராயன் 2

தடைகளைத்தாண்டும் தடந்தோள்கள் உண்டு!


அகங்களில் திக்திக் நொடிகள் துடிக்க
நகர்ந்தாய் நகர்ந்தாய் நிலவினை நோக்கி
நகர்ந்து நகர்ந்து நெருங்கிய போது
சடக்கென்றே உந்தன் தொடர்பை இழந்தோம்!
படர்ந்த பரப்பில் வெகுதூரம் சென்று
நடந்தபோதோ மௌனமாகி விட்டாய்! ஏனோ?
தடைகளைத் தாண்டி தடந்தோள் நிமிர்த்தி
விடைகண்டே மீண்டும் விரைந்தே வருவோம்!
தகத்தகாய வெண்ணிலவே! சந்ராயனை மீண்டும்
அகங்குளிர நாங்கள் அனுப்பும் பொழுது
மகத்தான நல்வரவை அன்பாய்த் தருவாய்!
மகுடமேற்கும் இந்திய நாடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home