Sunday, October 20, 2019

வாழ்வின் இயல்பு!

முதுமை வயதில்  இணையர் இருந்தும்
மெதுவாய் நகர்கிறது நாள்தோறும் நாள்கள்!
இணையரில் இங்கே ஒருவரில்லை என்றால்
தினமும் பொழுதைக் கழித்தல் கொடுமை!
இணையின்றி வாழ்தல் துயர்.

இருவராய் வாழ்ந்தோர் ஒருவராய் வாழும்
ஒருநிலை வந்தால் துரும்பையும் இங்கே
நகர்த்த துணையினைத் தேடும் அவலம்
அகத்தினில் ஏங்கவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home