Thursday, October 10, 2019

இந்தியாவின் மாண்புமிகு மோடி--
சீனாவின் மாண்புமிகு ஜின்பிங்
வரலாற்றுச் சந்திப்புக்கு வாழ்த்து!

11/12.10. 2019-- மகாபலிபுரம்!

உலகம் வள்ளுவத்தைப் பின்பற்றட்டும்!

மாமல்லர், பாறையில் யானைப் படம்வரைய
மாமல்லர் தந்தை அதைப்பார்த்து சிற்பிகளால்
பாறைகளில் கோயில்  செதுக்கி நகருக்கு
மாமல் லபுரம் பெயர்வைத்  ததாக செய்தியுண்டு!
ஊரறிய பல்லவரைப் போற்றும் கலைநகரம்
பாரறிய சுற்றுலா மையமாக மாறியதே!
காலம் அளித்த கொடை.

இந்தியாவின் மாண்புமிகு மோடி அவர்களும்
செஞ்சீனா மாண்புமிகு ஜின்பிங் அவர்களும்
சந்தித்துப் பேசுகின்றார்  மாமல் லபுரத்தில்!
இந்த வரலாறை ஏற்படுத்தும் வல்லமை
கொண்டிருக்கும் ஆளுமையை வாழ்த்து.

இந்தியா சீனா உறவு வலுப்பெற்றே
எங்கும் அமைதியுடன்  வாழட்டும் மக்களெல்லாம்!
அன்பில் மணக்கின்ற நட்பு மலரட்டும்!
வன்முறை தீவிர வாதம் மறையட்டும்!
நன்னெறிகள் வள்ளுவத்தைப் பின்பற்றி
நாடெல்லாம்
தங்கித் தழைக்கட்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home