Wednesday, October 09, 2019

பேச்சைக் குறை!

பேசுபேசு என்றே இடைவெளி இல்லாமல்
பேசுகின்ற கோலத்தில் வாழ்கின்றோம் நாள்தோறும்!
கைபேசி கையில் இருப்பதால் எப்போதும்
வைக்காமல் காதிலே வைத்தவண்ணம்
பேசுகின்றோம்!
கைவலிக்கும் என்றே செவியில் ஒலிகேட்க
மைக்கைத்தான் வைத்தே மணிக்கணக்கில் பேசுகின்றார்!

நடந்தாலும் பேச்சு! மிதிவண்டி பைக்கில்
கடந்தாலும் பேச்சு! விபத்தைத்  தெரிந்தும்
அடங்காமல் பேச்சு! தனிமையில்  தானாய்
நவரசங் காட்டித்தான் கையசைத்துப் பேசும்
உவகையை என்னென்பேன் நான்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home