Wednesday, October 02, 2019

பறித்தது யார்?

பறவைகள் கூடுகட்டி வாழ்ந்த இடத்தில்
மடமட வென்றே அடுக்ககம் கட்டிக்
குடியேறி வாழ்கின்றோம்! அந்தப் பறவை
குடியேறத் தத்தளிக்கும் காட்சியைக் கண்டால்
துடிக்கிறதே உள்ளம் துவண்டு.

தோப்பாக நின்ற இடமெல்லாம் வீடுகளைத்
தோதாக கட்டிக் குடியேறி மற்ற உயிரினங்கள்
வேகமாக வந்துபோகும் பாதை
பறித்துவிட்டோம்!
பாதகம் செய்கின்றோம் பார்.

இங்கே திறந்திருக்கும் சாளரங்க ளுக்குள்ளே
கொஞ்சம் இடங்கிடைத்த போதும் துழைந்தேதான்
தங்க இடம்தேடும் புள்ளினத்தை ஓடிஓடி
எங்களைத் தொந்தரவு செய்யாதே  என்றேதான்
சன்னல் கதவுகளை மூடி விரட்டுகிறோம்!
நம்மைப் புறாக்கள் வியப்புடன் நோக்குதடா!
என்ன பரிதாபம்? போ.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home