Monday, September 30, 2019

மணநாள் வாழ்த்துப்பா!

இணையர்:
மதுரை பாபாராஜ் -- வசந்தா

நாள்.

29.05.1975-- 29.05.2019

நாற்பத்து நான்காண்டு காலமாக இல்லறத்தை
ஊற்றெடுத்த பண்புகளால் நாளும் உயர்த்தித்தான்
ஏற்றத்தைத் தந்தவள்! உற்றார் உறவினர்கள்
போற்றும் விருந்தோம்பல் பண்பேந்தும் அன்பரசி!
மாற்றங்கள் ஏமாற்றம் அனைத்திலும் தோள்கொடுத்தாள்!
மாற்றுக் கருத்தைக் கடிதோச்சி மெல்லத்தான்
சாற்றுவாள்! பேசி முடிவெடுப்போம் ஒற்றுமையாய்!
நேற்று தொடங்கியது போல உள்ளதே
நாற்றுநட்ட எங்கள் மணவாழ்க்கை இங்கே!
காற்றாய்ப் பறந்ததே நாற்பத்து நான்காண்டு!
ஏக்கமற்ற வாழ்க்கைத் தொடர்.

மகளும் மருமகனும் பேரனும் வாழ்த்த
மகனும் மருமகளும் பேரன்கள் வாழ்த்த
அகங்குளிர வாழ்கின்றோம் நாள்தோறும் இங்கே!
குறள்வழி வாழ்வோம் இணைந்து.

மதுரை பாபாராஜ்

வாழ்த்தும் இதயங்கள்
ரவி--சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்-- சத்யபாமா
நோக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா


0 Comments:

Post a Comment

<< Home