Sunday, September 29, 2019

துறவறம்!

அக்கரைக்கு இக்கரை பச்சை!

இல்லறத்தில் சிக்கல்! துறவறம் ஏற்றால்தான்
நல்லதென்றே எண்ணி மனிதன் இல்லறத்தைத்
தள்ளிவைத்தே நிம்மதியைத் தேடியே ஓடுகின்றான்!
எல்லைகளில் மாற்றத்தை ஏற்று.

கமண்டலம் ஏந்தித்தான் காவி உடுத்தி
தனக்கென தாடி சடாமுடி தன்னை
வளர்த்தே  துறவறக் கோலத்தை ஏற்றே
இமயமலை நோக்கிப் பயணத்தில்  போனான்!
மனதில் குடும்ப நினைவு.

நினைவுகளின் தாக்கம் சலனத்தைத் தந்தே
மனதைப் பலநிலையில் அங்கே இழுத்தே
மணித்துளி நாளும் யுகமாக மாற
தனிமையை விட்டே துணைகளை நாடி
பனிமலையில் இங்கே துறவிநிலை விட்டே
அணியணியாய் ஒட்டி உறவாடும் வாழ்வில்
அமைதியைக் காணலாம் என்றான் அவன்தான்!
இமயமோ அக்கரைக்கு இக்கரை பச்சை!
மனமே! உணரென்று கூறிச் சிரிக்க
தனக்குள் நகைத்தான் நடந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home