Monday, September 30, 2019

தேவதாஸ்


தேவதாஸ்  ஒரு மனிதநேயக் கவிதை!

வாழ்க்கை நிறைவு 16.02.2019

 தாஸ்! கௌசல்யா தாஸ்!



படித்தாய்! பட்டம் பெற்றாய்!
பல நகரங்களில் காலடிகளைப் பதித்து

சென்னையில் வாழ்க்கையைத் தொடர்ந்தாய்!

பன்முக ஆற்றலுடன் உழைத்தாய்!
கலைத்துறையும் உனக்கு இடமளித்தது.

உறவினர் நண்பர்களின் வேடந்தாங்கலே உன்வீடு.

எங்களுக்குச் சென்னை என்றால்
 நீதான் நினைவில் வருவாய்.
சென்னை முகவரியே நீதான்.!

சென்னையில்

எனக்கு அன்னமிட்ட கைகள்
உன்கையும் கௌசல்யா
அக்காவின் கைகளுமே!

நீ
ஒரு காவியம்!
அன்பின் ஓவியம்!
நீ
இருக்கின்றாய் என்ற
நினைப்பே எனக்குத் தெம்பு!

நீதான்
மனிதநேயம்!
எங்கே சென்றாய்?

அப்படி என்ன அவசரம்?
உன் மூச்சுகூட
கௌசல்யா அக்காவின்
பெயராகத்தானே வந்தது!


நாள்தோறும்
நினைத்து நினைத்துக்
குமுறிக் குமுறி அழுவாயே!.
அவர் சென்று ஓராண்டு
இன்னும் ஆகவில்லை!
அவரைத் தேடி
நீயும் சென்றுவிட்டாய்!

நாங்கள் படியேறி வரும்போது
உன்வீட்டில்
ஒரு சிங்கம் உட்கார்ந்து இருப்பதைப்போல கம்பீரமாக
இருப்பாயே!

என்று நாங்கள்
காண்போம் ?
என்ன செய்ய?
நாங்கள் தாங்கத்தான் வேண்டும்.!
தாங்கிக் கொள்கிறோம்
உன் நினைவுகளைச் சுமந்தபடி!


மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home