Monday, September 30, 2019


ரகு-- அமுதா-- நான்சி
இல்லத்தில்  கொலு!

30.09.2019

அன்பாய்  அமுதா ரகுவீரன் வாழ்கின்ற
பண்பகத்தில் தாயும் உடனிருக்க பாசமகள்
புன்னைக ஏந்துகின்ற நான்சி மகிழ்ந்திருக்க
கண்கவரும் வண்ணக் கொலுவின் அழகினைக்
கண்டு களிக்கின்றோம்  நாம்.

பிரமாண்ட மாக அழகுசெய்த அம்மன்
அலங்காரம்! ஆகா அருமை! அந்தச்
சிலைக்கு நிகரோ சிலைதான் உணர்வோம்!
கலைமிளிரும் பேரழகு தான்.

பக்தி வரலாறைச் சொல்கின்ற பொம்மைகள்
அக்கறையாய் இங்கே அடுக்கிவைத்த கோலத்தில்
பக்தி ரசமுடன்  அக்காதான் பாடுகின்றார்!
இத்தகைய காட்சியைக் காணக்கண் கோடிவேண்டும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா






0 Comments:

Post a Comment

<< Home