Monday, September 30, 2019

கோசல் வீட்டுக் கொலு

மருமகன் ராஜ்குமார்-- மகள் பிருந்தா-- 

பேரன் கோசல் வீட்டுக் கொலு!

                29.09.2019

ஆதிகால பொம்மை முதலாக இன்றைய
காஞ்சிநகர் அத்தி வரதரும்  கண்கவர
அங்கே  அணிவகுக்க நன்றாய் அடுக்கிவைத்த
கண்காட்சி நன்றுதான் காண்.

பக்தி மணங்கமழப் பாடினார்  நாட்டமுடன்!
நற்றமிழ்ப் பாட்டில் உலகை மறந்தேதான்
சுற்றமுடன் கேட்டு ரசித்தோம்! செவிக்குணவும்
சிற்றுண்டி நன்கு சுவையாய் வயிற்றுக்கும்
வற்றாத அன்புடன் தந்தார் மகிழ்வுடன்!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home