Wednesday, January 15, 2020

ஜல்லிக்கட்டு!

வாடி வாசல் திறந்தாச்சு
காளைகள் சீறிப் பாய்கிறது

வேக மாக வருகிறது
வாசலில் வீரர் கூட்டத்தான்

முந்தி முந்தி வருகிறது
கவனம் எல.லாம் காளைமேல்

தமிலைப் பிடிக்க உற்சாகம்
பொங்கிப் புரள  நிற்கின்றார்

காளைகள் வெளியே வந்ததுமே
மாட்டைப் பிடிக்கும் வீரர்கள்

பாய்ந்தே அடக்கப் பார்க்கின்றார்
ஒருசிலர் வெற்றி அடைகின்றார்

ஒருசிலர்  சரிந்தே வாழ்கின்றார்
வெற்றி தோல்வி  கேள்வியில்லை

முயற்சி ஒன்றே மூச்சாகும்
பாரம் பரியம் வீச்சாகும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home