Wednesday, February 12, 2020

குறள்:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:306)

கலைஞர் உரை:

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.


அற்புதமா? அற்பமா?

எத்தனை அற்புதப் பண்புடன் வாழ்ந்தாலும்
அத்தனையும் அற்பமாகும் சீறும் சினம்மட்டும்
சற்றும் குறையாமல் வாழும் நிலையெடுத்தால்!
அற்பத்தால் அற்புதம் பாழ்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home