Wednesday, February 12, 2020

வந்துகொண்டே இருப்பார்கள்!

கவிஞனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டால் போதும்
புவியெது? வானமெது? என்றறி யாமல்
பறந்திருப்பான்  காகிதப் பட்டமாக நாளும்!
உறங்கமாட்டான் இந்தச் சமுதாயக் கேட்டை
விடமாட்டேன்! சீர்திருத்திப் பார்க்கும் கடமை
நடமாடும் வீரனென்பான்! நெஞ்சை நிமிர்த்தி
களமாட முந்திநிற்பான்! ஆண்டுகள் ஓடும்!
தொடங்கிய அந்த இடத்திலேயே நிற்பான்!
முடங்கித் தவிப்பான்! முயற்சி அயரும்!
நடமாட்டம் தள்ளாடும்! அங்கே இவன்போல்
தடம்பதிப்பேன் என்ற முழக்கம் அரும்பும்!
அடப்போப்பா! என்பான் சலித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home