Thursday, March 26, 2020

வீரமும் கோழைத்தனமும்!

சொல்ல முடியாத நேரத்தில்  அஞ்சாமல்
சொல்ல முடியாத தன்கருத்தைச் சொல்கின்ற
வல்லமையே வீரமாகும்! பேசும் வரலாறாய்
இவ்வுலகில் நிற்கும் நிலைத்து.

சொல்லவே கூடாத நேரத்தில் முந்திவந்தே
சொல்லவே கூடாத தன்கருத்தைச் சொல்கின்ற
புல்லறி வாண்மையே கோழைத் தனமாகும்!
எள்ளலுக்கு வித்தாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home